அரசாங்கத்தின் பெருந்தொகை இலாபம்: உண்மைகளை உடைத்த தெறிந்த எம்பி!
அதிகரித்த வரி விதிப்பே சுங்கத்தின் இலாபம் ட்ரில்லியன் கணக்கில் அதிகரித்துள்ளதாகவும் இவை பெரும் சாதனைகளாக ஊடக மாநாடுகளில் தெரிவிக்க வேண்டிய காரணங்களல்ல என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இன்றை நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், “இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அதிகரித்த வரிகள் இறக்குமதியாளர்களால் பாவனையாளர்களுக்கு செல்கிறது.அதனாலே பொருட்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது.
200 - 600 வீத வரி
இதனால் மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு சாதாரண மற்றும் மத்தியதர மக்கள் பயன்படுத்திய படி வாகனம் 25 இலட்சத்துக்கு இருந்தது.இன்று அதன் விலை 75 இலட்சமாகும்.
அதேபோல் வெகனார் 95 இலட்சம், ஷ்பேசியா ஒரு கோடி, எல்டோ 71 இலட்சம், விட்ஷ் காரை 12 இலட்சத்துக்கு கொடுப்பதாக ஒரு அமைச்சர் கூறினார்.அதனாலே ஜப்பான் இப்போது அந்த வாகனத்தை உற்பத்தி செய்வதில்லை.
தற்போது யாரிஷ் தான் இறக்குமதி செய்யப்படுகிறது.அதன் விலை ஒரு கோடி பத்து இலட்சம் ரூபா.இவ்வாறு வாகனங்களுக்கு 200 - 600 வீதம் வரி அறவிடப்படுகிறது. இவ்வாறான நிலையில், சாதாரண விலைக்கு வாகனம் எவ்வாறு கொடுப்பது.
அரசு சார் நிறுவனங்களின் வருமானம்
மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி ஒரு கிலோவுக்கு 40 வீதமும், உப்பு ஒரு கிலோவுக்கு 65 வீதம் மேலும் மாவுக்கு இன்றும் 46 வீதம் அறிவிடப்படுகிறது.
இரண்டு இலட்சத்துக்கு விற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் 6 இலட்சமாகிறது.இவ்வாறு அதிகமான வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏன் அரச திணைக்களங்கள் மற்றும் அரசு சார் நிறுவனங்களின் வருமானம் அதிகரிக்கப்படவில்லை.இவற்றின் வருமானத்தை அதிகரிப்பதாக தெரிவித்த அரசாங்கம் என்ன செய்கிறது.
ஜனநாயக பொருளாதாரம் என்று சொன்னவர்களின் செயற்பாடுகளா? இவை." என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
