முல்லையில் அனுஷ்டிக்கப்பட்ட செஞ்சோலை படுகொலையின் 19வது ஆண்டு நினைவேந்தல்
முல்லைத்தீவு (Mullaitivu) - செஞ்சோலை வளாகத்தில் சிறிலங்கா இராணுவ விமானப்படையினரின் வான் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்களுக்கான நினைவேந்தல் இன்றைய தினம் (14.08.2025) அனுஷ்டிக்கப்பட்டது.
முல்லைத்தீவு – வள்ளிபுனம், இடைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை வளாகத்தில் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவர்கள் மீது இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பாடசாலை மாணவர்கள் 53 பேர் மற்றும் பணியாளர்கள் 4 பேரினதும் 19ஆவது ஆண்டு நினைவுத்தினம் இன்றாகும்.
படுகொலை
இதன்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சுடரேற்றி, அக வணக்கம் செலுத்தி மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் உயிரிழந்த பிள்ளைகளின் உறவினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே. கரிகாலன், பிரதேச சபைஉறுப்பினர் சி.குகநேசன், முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ச.ஜுவராசா, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






