மின்சக்தி துறையில் சீர்திருத்தம் - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்
மின்சக்தி துறையில் செய்யவேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தனக்கு கிடைத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையை அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையிடம் கையளிக்கவுள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முன்வைப்பு
எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இந்தச் சீர்திருத்தங்களை நாடாளுமன்றத்தில் முன்வைக்க முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட குழுவின் உறுப்பினர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
I have received the Report prepared by the Cabinet Appointed Committee On Power Sector Reforms. I will handover the Report to the President & the Cabinet of Ministers. Hope to present the reforms to Parliament by November. I thank the members of the Committee for their services.
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 22, 2022