கொழும்பு உட்பட சனநெரிசல் மிக்க பகுதிகளில் குண்டுத்தாக்குதல் : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு
Sri Lanka Police
Colombo
Bomb Blast
Arrest
By Jaso
கொழும்பு உள்ளிட்ட சனநெரிசலான பகுதிகளில் தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்த நபர் ஒருவர் தயாராகி வருவதாக சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எந்தவொரு சம்பவமும் பதிவாகவில்லை என்பதை அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.
கஞ்சிப்பானை இம்ரானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் கைது
எனினும், 'கஞ்சிப்பானை இம்ரான்' என்பவருடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிய நபர் ஒருவர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்த் தேசிய சக்திகள் ஈரான் விவகாரத்தை உரையாடலுக்கு உட்படுத்துவத வேண்டும் 49 நிமிடங்கள் முன்
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
2 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி