கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு!

Iran Iran-Israel War Iran-US Conflict
By Kiyas Shafe Apr 20, 2026 06:34 AM GMT
Report

கச்சதீவு விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கத்திடம் இருந்து இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேசத்திற்கு விஜயம் செய்த போதே, ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர் இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர்,

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

இந்திய துணை ஜனாதிபதி இன்று நுவரெலியா விஜயம்

இருதரப்பு ஒப்பந்தங்கள்

கச்சதீவு என்பது முறையான இருதரப்பு ஒப்பந்தங்களின் மூலம் இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்ட ஒரு பகுதி.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு! | Request From India Govt Regarding Katchatheevu

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய அரசாங்கம் இதுவரை எந்தவிதமான உத்தியோகபூர்வ கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.

இந்தியாவில் தற்போது தேர்தல் காலம் என்பதால், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ஒரு பிரசாரமாகவே இதனைப் பார்க்கிறோம்.

எனவே, இது குறித்து நாம் தேவையற்ற வகையில் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.

1974 ஆம் ஆண்டு அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் இலங்கைப் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோருக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான கடல் எல்லைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டன.

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

யாழ் நகர மத்தியில் நிகழும் அவலம் : மாநகரசபையின் பாராமுகம்

தமிழக கடற்றொழிலாளர்கள்

இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்த தயார் இந்த ஒப்பந்தங்களின்படி, இந்திய கடற்றொழிலாளர்கள் கச்சதீவில் வலைகளை உலர்த்துவதற்கும், புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கேற்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவு விவகாரத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு! | Request From India Govt Regarding Katchatheevu

இருப்பினும், சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி கடற்றொழிலில் ஈடுபட உரிமைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக கடற்றொழிலாளர்கள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபடும் போது கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், தேர்தல் காலங்களில் இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கிறது.

எதிர்காலத்தில் இந்திய அரசு இது தொடர்பாக ஏதேனும் கோரிக்கைகளை முன்வைத்தால், இராஜதந்திர ரீதியாகப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கின்றது” என பிரதி அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

அரசாங்கத்துக்கு எதிரான மே தின கூட்டம் - ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்