சிறிலங்கா இராணுவ சிப்பாய் சடலமாக மீட்பு
Sri Lanka Army
By Jaso
சிறிலங்கா இராணுவ சிப்பாய் ஒருவர் குளத்திலிருந்து இன்று (29) அதிகாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஹொரணை, தொம்பகொட இராணுவ முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிய எதிலிவெவ, தெலுல்ல கொலனியை சேர்ந்த 23 வயதுடைய தரிந்து லக்ஷான் என்ற இராணுவ சிப்பாயே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
முகாமில் உள்ள குளத்தில் இருந்து
முகாமில் உள்ள குளத்தில் இருந்து இன்று (29) அதிகாலை குறித்த இராணுவ சிப்பாயின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான நீதவான் விசாரணைகளை ஹொரணை நீதவான் இன்று (29) மேற்கொண்டார். எனினும், உயிரிழந்த இராணுவ வீரரின் உறவினர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |