உடனடியாக பதவி விலகவும்! - சங்கக்காரவின் மனைவி சீற்றம்
Kumar Sangakkara
Go Home Gota
Galle Face Protest
Sri Lanka Economic Crisis
By Kanna
இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்காரவின் மனைவி யெஹாலி சங்கக்கார, அரசாங்கத் தலைவர்களை உடனடியாக பதவி விலகுமாறு கோரியுள்ளார்.
நேற்றிரவு காலி முகத்திடல் போராட்ட தளத்தில் உரையாற்றிய யெஹாலி, நாட்டை மேலும் அழிக்காமல் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.
இதேவேளை, தேசிய நெருக்கடிக்கு அரசாங்கம் இன்னும் தீர்வை வழங்கவில்லை என்று கூறிய அவர், மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருப்பதாக கூறினார்.
குமார் சங்கக்கார தற்போது இந்தியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்று இந்தியாவில் இருந்து இலங்கையில் நடைபெறும் போராட்டங்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.