பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு)

France Paris
By Sumithiran Jun 30, 2023 07:04 AM GMT
Report

புதிய இணைப்பு 

பிரான்ஸில் மூன்றாவது நாளாக நேற்று வியாழக்கிழமை இரவு மீண்டும் வன்முறைகள் இடம்பெற்றிருந்தன.

வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை அதிகாரி ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 வயதான நாஹெல் என்ற இளைஞன் மரணமடைந்ததை அடுத்து இந்த வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.

காவல்துறையினரின் பாதுகாப்பையும் மீறி வர்த்தக நிலையங்கள் சூறையாடப்படுவதுடன் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் 40,000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இளைஞரை சுட்டுக் கொலை செய்த காவல்துறை அதிகாரி, உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

எனினும் வன்முறைகள் தொடர்ந்து பதிவாகி வரும் நிலையில் பிரான்ஸ் அதிபர் அவச கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் இணைப்பு 

பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது.

அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

பிரான்ஸில் வெடித்தது கலவரம் - பற்றி எரிகிறது பாரிஸ்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வாகன சோதனையின்போது காரை நிறுத்தாமல் சென்ற 17 வயதே ஆன ஆபிரிக்க வம்சாவளி சிறுவனை காவல்துறையினர் சுட்டுக் கொன்ற நிலையில் அந்நகரம் முழுவதும் காவல்துறைக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. அது வன்முறையாக வெடிக்க, தொடர்ந்து இரண்டாவது நாளாக பாரிஸ் நகரின் பல பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அமைதியை நிலைநாட்ட சுமார்  ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

ஆபிரிக்க வம்சாவளி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துள்ள அதிபர் இமானுவேல் மக்ரோன், "இது மன்னிக்கமுடியாத குற்றம். சட்டம் தனது கடமையைச் செய்யத் தொடங்கிவிட்டதால் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாரிஸ் நகரின் நான்டெர் புறநகர்ப் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். புதன்கிழமை இரவு சோதனை நடைபெற்றபோது அவ்வழியாக கார் ஒன்று வேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தக் காரை காவல்துறையினர் நிறுத்த உத்தரவிட்டும் அது நிறுத்தப்படாததால் காவல்துறையினர் அதனை விரட்டி சுற்றி வளைத்துள்ளனர்.

பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்த சம்பவம்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

பின்னர் காரில் இருந்த ஆபிரிக்க சிறுவனை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் அச்சிறுவன் உயிரிழந்தார். இது பாரிஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. பாரிஸ் இன ரீதியாக பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக அறியப்படுகிறது. இங்கே பல்வேறு இனத்தவர், கலாசாரத்தைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். இந்நிலையில் கருப்பின இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரை

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

வடக்கு நகரான லில்லி, டோலூஸ், தென்மேற்கு நகரங்களான அமியன்ஸ், டிஜோன், எஸ்ஸோன் ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். குப்பைத் தொட்டிகளுக்குத் தீவைத்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர். எஸ்ஸோன் பகுதியில் பேருந்து ஒன்றை நிறுத்தி பயணிகளை இறக்கிவிட்டுவிட்டு அதற்கு தீ வைத்தனர். இன்னும் சில பகுதிகளில் கார்கள், காவல்துறை வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

தெளிவான சட்டவிதிமீறல்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மக்கள் அமைதியைக் கடைப்பிடிக்குமாறு உள்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட காவலரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர், "நடந்த சம்பவம் சிசிடிவி கமராவில் தெளிவாகப் பதிவாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் 17 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது பதிவாகியுள்ளது. இது தெளிவான சட்ட மீறல்" என்று கூறியுள்ளார்

. முன்னதாக பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிரதமர் எலிசபெத் போர்ன் கூறுகையில், "இது தெளிவான சட்டவிதிமீறல்" என்றார்.

தாயாரின் வேண்டுகோள்

பிரான்ஸில் தொடரும் கலவரம் - நாடளாவிய ரீதியில் 667 பேர் கைது! (புதிய இணைப்பு) | Riots Broke Out In France Burning About Paris

இதற்கிடையில் சிறுவனின் தாய் டிக்டொக் சமூக வலைத்தளம் மூலமாக பொதுமக்களிடம் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். தான் ஏற்பாடு செய்துள்ள நினைவஞ்சலிப் பேரணியில் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.


GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுண்டிக்குளி

03 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019