A9 பிரதான வீதியில் இன்று அதிகாலை கோர விபத்து : ஐவர் படுகாயம்
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Accident
By Sumithiran
மிகிந்தலையில் உள்ள A9 பிரதான சாலையில் இன்று (10) அதிகாலை நடந்த வீதி விபத்தில் ஐந்து பேர் காயமடைந்தனர்.
தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்துவிட்டு வானில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் குழுவொன்று விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதி
விபத்தில் காயமடைந்தவர்கள் மிகிந்தலை மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

சம்பவம் குறித்து மிகிந்தலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி