நாடாளுமன்ற உணவுச் செலவு ரூபாய் 24 கோடி! வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கை
2025 ஆம் ஆண்டில் இலங்கை நாடாளுமன்றத்தின் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக 24 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் புதிய வருடாந்த செயல்திறன் அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.
அந்த அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உணவு மற்றும் பானங்களைக் கொள்வனவு செய்வதற்காக மட்டுமே ரூபாய் 247,049,010.08 செலவிடப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படும் எரிவாயு
இதற்கு மேலதிகமாக, போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரைக் கொள்வனவு செய்வதற்காக ரூபாய் 2,278,758.12 செலவிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் உணவு சமைப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எரிவாயுவுக்காக (Gas) ரூபாய் 3,050,850.00 செலவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவு மற்றும் பானங்களை வழங்கிய சேவைத் தடவைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொள்ளும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக உணவு மற்றும் பானங்களை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 7,200 என்ற வரம்பைத் தாண்டி 10,670 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றப் பணியாளர்கள்
இது 148 சதவீத குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
அவ்வாறே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்தினர்கள் மற்றும் நாடாளுமன்றப் பணியாளர்களுக்காக உணவு, பானங்கள் வழங்கியதில் 361,930 தடவைகள் சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

இது எதிர்பார்க்கப்பட்ட இலக்கை விட 119 சதவீத அதிகரிப்பாகும்.
நாடாளுமன்ற வளாகத்திற்குள் தினசரி ஐந்து சிற்றுண்டிச்சாலைகள் இயங்கி வருவதுடன், நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாத நாட்களில்கூட ஒரு நாளைக்கு 1,000 முதல் 1,200 நபர்களுக்கு உணவு வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |