வாக்களித்த மக்களையே அவமானப்படுத்திய ஆட்சியாளர்கள்: அநுர குமார பகிரங்கம்

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 Sri lanka election 2024 sl presidential election
By Dilakshan Sep 18, 2024 10:50 PM GMT
Report

இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் தமக்கு வாக்களித்த மக்களையே அவமானப்படுத்தியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்றையதினம் (18) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இறுதி பிரச்சார கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தனது இறுதி உரையை ஆற்றி முடித்தார் தமிழ் பொது வேட்பாளர்

தனது இறுதி உரையை ஆற்றி முடித்தார் தமிழ் பொது வேட்பாளர்


வெற்றியில் பங்கு

அதன் போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இதுவரை நல்ல அபிலாஷைகளுடனும் அரசாங்கத்தை கொண்டு வர நம்பிக்கையுடனும் மக்கள் வாக்களித்தனர்.

வாக்களித்த மக்களையே அவமானப்படுத்திய ஆட்சியாளர்கள்: அநுர குமார பகிரங்கம் | Rulers Who Humiliated People Who Voted For Them 

2015 இல் ரணில்-மைத்திரி அரசாங்கத்தை அமைப்பதற்கு இலட்சக்கணக்கான மக்கள் வாக்களித்தனர், பின்னர் கோட்டாபய அரசாங்கத்தைக் கொண்டுவர 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்தனர்.எனினும் ஆட்சியாளர்கள் தமக்கு வாக்களித்த மக்களை குறுகிய காலத்திலேயே அவமானப்படுத்தினர்.

எங்களுக்கு வாக்களிக்கும் மக்களின் கண்ணியத்தை பாதுகாப்போம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கைய தக்க வைத்துக் கொள்ள நாங்கள் பொறுப்புடன் செயல்படுவோம்.

பழைய, தோல்வியுற்ற பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நவீன உலகம் மற்றும் உலகின் புதிய போக்குகள் ஆகியவற்றுடன் ஒத்துப்போகத் தவறியதால் நாடு பொருளாதார குறைபாடுகளை சந்தித்தது, இப்போது தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை மாற்றுவதற்கான நேரம் இது.

தமிழ் பொது வேட்பாளர் 2010 இல் களமிறக்கப்பட்டிருக்க வேண்டியவர்: விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டு

தமிழ் பொது வேட்பாளர் 2010 இல் களமிறக்கப்பட்டிருக்க வேண்டியவர்: விஜயகலா மகேஸ்வரன் சுட்டிக்காட்டு


ரணில் - மகிந்த 

ரணில் விக்ரமசிங்க 47 வருடங்களாக எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர், ஜனாதிபதி எனப் பல்வேறு பதவிகளில் நாடாளுமன்றத்தில் இருந்துள்ளார்.

வாக்களித்த மக்களையே அவமானப்படுத்திய ஆட்சியாளர்கள்: அநுர குமார பகிரங்கம் | Rulers Who Humiliated People Who Voted For Them

மகிந்த ராஜபக்ச 54 வருடங்களாக நாடாளுமன்றத்தில் பல்வேறு பதவிகளில் இருந்துள்ளார். அவர்கள் பின்வாங்கி அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

எமது அரசாங்கம் அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையிலும் உயர் தரத்திலும் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும்.

நமது ஆட்சியாளர்கள் நமது உற்பத்திகளை அழித்து எல்லாவற்றையும் இறக்குமதி செய்யத் தொடங்கினர். நமது தோல்வியடைந்த பொருளாதாரக் கொள்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தது.

வரவை அதிகரிக்கவும், டொலர்கள் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தவும் புதிய பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும்” என்றார்.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம்

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு: வினோ நோகராதலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023