வெளிநாட்டு ஜனாதிபதியொருவரின் விசா திடீர் ரத்து : ட்ரம்ப் அதிரடி
கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவின் அமெரிக்க விசாவை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலம்பியாவின் முதல் இடதுசாரி ஜனாதிபதியான பெட்ரோ, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக தயாரான நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் தனது விசாவை ரத்து செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நிதி அமைச்சர் ஜெர்மன் அவிலா தொடர்புடைய கூட்டங்களில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கைகள்
ஜனவரி மாதம் சட்டவிரோத புலம்பெயர் மக்களுடன் புறப்பட்ட இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறங்க கொலம்பியா மறுத்துவிட்ட சம்பவம் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கோபம் கொள்ள வைத்துள்ளது.
இதன்பின், கொலம்பிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக தீர்க்கமான பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தார்.
இந்தநிலையிலேயே, கொலம்பிய ஜனாதிபதியின் அமெரிக்க விசாவை ட்ரம்ப் நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
விசா தேவை
இதனிடையே நடந்து முடிந்த அமைச்சர்கள் குழுவின் கூட்டத்தின் போது பேசிய ஜனாதிபதி பெட்ரோ, “கண்டிப்பாக என விசா தேவை இல்லை, டொனால்ட் டக்கை நான் பல முறை பார்த்திருக்கிறேன்.
அமெரிக்கா செல்லாத நிலையில், நான் வேறு வேலைகளில் கவனம் செலுத்த இருக்கிறேன்” என பெட்ரோ குறிப்பிட்டுள்ளார்.
கொலம்பிய மக்கள் 160 பேர்களை கை, கால்களில் விலங்கிட்டு ட்ரம்ப் நிர்வாகம் அனுப்பி வைத்ததை கடுமையாக கண்டித்த ஜனாதிபதி பெட்ரோ, இரண்டு அமெரிக்க இராணுவ விமானங்களை தரையிறங்கவும் அனுமதி மறுத்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
