ஜெலன்ஸ்கிக்கு அதிர்ச்சி: ரஷ்யா ஏவி வீசிய ட்ரோன் வெள்ளம்
உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதல் நீண்டு கொண்டே போகின்ற நிலையில் போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
விமானப்படை
இச்சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படை தளம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல் நடத்தியது.
ட்ரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 40 ரஷ்ய போர் விமானங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் ஆரம்பத்திலிருந்து ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்பட்டது.
ரஷ்யா பதிலடி
இந்த தாக்குதலுக்கு நிச்சயம் ரஷ்யா பதிலடி கொடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி
இதனை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதிப்படுத்தி உள்ள நிலையில் இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்தோடு, 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் சிலர் மீட்புப்படையினர் என தெரிவிக்கப்பட்டடுள்ளது.
காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் ரஷ்யாவின் இந்த தாக்குதலில், உக்ரைனின் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட அரசு கட்டடங்கள், ஐந்து தனியார் சொத்துகள் மற்றும் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் என 40 சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
