உலக நாடுகளின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு! புடின் வெளியிட்ட அறிவிப்பு
அரசியல் தலையீடு இல்லாமல் நீண்டகால ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டால், ஐரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல நாடுகளுக்கு ரஷ்யா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வழங்கத் தயாராக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மற்றும் எண்ணெய்-எரிவாயு நிறுவனத் தலைவர்களின் முன்னிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நிலைமை காரணமாக உலகளாவிய எரிசக்தி நெருக்கடி அதிகரித்து வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.
எண்ணெய் உற்பத்தி
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் எண்ணெய் உற்பத்தி ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Image Credit: Reuters
ரஷ்யா உலகின் இரண்டாவது பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடாகவும், உலகிலேயே மிகப்பெரிய இயற்கை எரிவாயு கையிருப்பைக் கொண்ட நாடாகவும் இருப்பதால், தேவையானால் பல நாடுகளின் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றும் புடின் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், தற்போதைய எண்ணெய் விலை உயர்வை பயன்படுத்தி ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கடன்களை குறைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.