அமெரிக்காவின் நரித்தனம் - நினைக்க முடியாத பேரழிவு!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மிகப்பெரிய பேரழிவை விளைவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றம், அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியமை உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்நாட்டின் கிழக்கு பொருளாதார கூட்டமைப்பின் கலந்தாய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஆப்கானிஸ்தான் உடைவதை ரஷ்யா விரும்பவில்லை. ஆப்கானிஸ்தானுடன் உலக நாடுகள் இராஜாங்க ரீதியாக உறவை நீட்டிக்க வேண்டும் என தலிபான்கள் விரும்பினால் முதலில் அவர்கள் நாகரிகமாக நடந்துகொள்ள வேண்டும். பண்படுத்தப்பட்ட சமூகமாக அவர்கள் மாற வேண்டும்.
எப்போது வேண்டுமானால் எளிதில் தொடர்பு கொள்ளலாம், எளிதில் பேசலாம், சமரசம் செய்யலாம் என்ற நிலையை அவர்கள் எட்ட வேண்டும்.
யாரிடமிருந்தும் கேள்விகளை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறியது மிகப்பெரிய பேரழிவை விளைவித்துள்ளது. அமெரிக்கர்கள் திட்டமிட்டு செயல்படக் கூடியவர்கள். 20 ஆண்டுகளாக 1.5 ட்ரில்லியன் டாலர் ஆப்கனில் செலவழித்துள்ளனர். ஆனால், அதற்கான விடை பூஜ்ஜியமாக உள்ளது.
ஆப்கானில் 20 ஆண்டுகளாக அமெரிக்காவுடனும், மேற்கத்தியப் படைகளுடனும் இணைந்து செயல்பட்டவர்களின் கதி இப்போது இன்னுமொரு பேரழிவாக உருவெடுத்துள்ளது. தலிபான்கள் முதலில் அமெரிக்காவுடனும் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.
உங்களுடன் 20 ஆண்டுகளாக போரில் இருந்தவர்கள் அவர்கள் தான். அவர்களுடனான உங்கள் நிலைப்பாட்டை இறுதி செய்துவிட்டு அடுத்ததாக சீனா, ரஷ்யாவை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள் என்பதை இறுதி செய்யுங்கள் என்றார்.