உக்ரைனில் பலத்த வெடி சத்தம்! மீண்டும் தாக்குதல்களை தொடரும் ரஷ்யா
அமெரிக்காவுடன் ரஷ்யா மேற்கொண்டிருந்த உக்ரைனுடனான தற்காலிக போர்நிறுத்தம், முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டில் இதுவரை இடம்பெற்ற தாக்குதல்களில் மிகப் பெரிய அளவிலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை ரஷ்யா செவ்வாய்க்கிழமை உக்ரைன் மீது நடத்தியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த வெடி சத்தம்
இதனால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெப்ப வசதி துண்டிக்கப்பட்டு, கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: NEWS10 ABC
உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் பலத்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ட்னிப்ரோ, கார்கிவ், சுமி, சபோரிஜ்ஜியா மற்றும் ஓடெஸா உள்ளிட்ட பகுதிகளிலும் ரஷ்ய தாக்குதல்கள் பதிவாகியுள்ளதாக தெரியவருகிறது.
ஜெலென்ஸ்கியின் அறிவிப்பு
இந்நிலையில், உக்ரைனின் மின்சார வலையமைப்பை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு அமெரிக்கா எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதை தங்கள் அரசு எதிர்பார்த்து காத்திருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

Image Credit: BBC
“இந்த கடும் குளிர்கால சூழலில், தொடர்புடைய கட்டமைப்புகளை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்ற யோசனை அமெரிக்காவின் தரப்பிலிருந்தே முன்வைக்கப்பட்டது.
அந்த உடன்படிக்கையை மீறியுள்ள இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்காவின் பதிலை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என அவர் தனது கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |