ரஷ்ய தாக்குதலால் ஆயிரம் பேர் உயிரிழப்பு!
people
russia
army
ukraine
war
By Thavathevan
ரஷ்ய படையினரின் தாக்குதலில் இதுவரை உக்ரைன் நாட்டை சேர்ந்த ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஒன்பதாயிரத்திற்கும் அதிகமான ரஷ்ய வீரர்களை கொன்று விட்டதாக உக்ரைன் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் இராணுவம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரஷ்யப் படைகளின் 251 தாங்கிகள், 939 கவச வாகனங்கள், 105 பீரங்கி அமைப்புகள், 18 விமான எதிர்ப்பு போர் அமைப்புகள், 33 விமானங்கள், 37 உலங்கு வானூர்திகள், 404 வாகனங்கள் ஆகியன அழிக்கப்பட்டுள்ளதுடன் 9,166 ரஷ்ய படை வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் ஐ.நா.வின் பாதுகாப்பு சபைக் கூட்டம் எதிர்வரும் ஏழாம் திகதி நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் உக்ரைனில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.