மரியுபோல் நகரம் ரஷ்யா வசம்!! உக்கிரமடையும் மோதல்
உக்ரைன் - மரியுபோல் நகரம் ரஷ்ய படைகளின் வசமாகிவிட்டது என ரஷ்யா இராணுவம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 87ஆவது நாளை எட்டியுள்ளது.
மரியுபோல் நகரில் ரஷ்யாவின் வசம் சிக்காமல் எஞ்சி இருந்த அசோவ்ஸ்டல் உருக்காலையில் இருந்த உக்ரைன் படை வீரர்கள் 2 ஆயிரம் பேர் சரணடைந்துள்ளதாக ரஷ்ய இராணுவ இமைச்சர் செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
சரணடைந்த உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மரியுபோல் நகரம் முழுவதும் ரஷ்ய படைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரஷ்ய துருப்புகள் அறிவித்துள்ளன.
இது ஒருபுறமிருக்க, கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்பில் அங்கு உக்கிரமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருகிறது. ரஷ்ய போர் விமானங்கள் அங்கு குண்டுமழை பொழிந்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
