தீர்வு காணாத இனப்பிரச்சினை: ரணில் மீது குற்றச்சாட்டு!

Ranil Wickremesinghe Sri Lanka
By Harrish Mar 22, 2025 12:29 PM GMT
Report

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சந்தர்ப்பங்களை பலவீனப்படுத்தியவர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் (sabakugathas) குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ அண்மையில் சர்வதேச ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் இனப்பிரச்சினையை சர்வதேசத்தால் தீர்க்க முடியாது என்றும் உள்ளகப் பொறிமுறை மூலம் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

காசாவில் ஒலிக்கும் மரண ஓலம்: ஆழ்ந்த கவலை வெளியிட்ட இலங்கை

காசாவில் ஒலிக்கும் மரண ஓலம்: ஆழ்ந்த கவலை வெளியிட்ட இலங்கை

இனப்பிரச்சினைக்கான சர்வதேச விசாரணை

அதேநேரம், சர்வதேச விசாரணை தேவையில்லை எனவும் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர வேண்டும் என்றும் அதிகாரங்கள் இழந்த நிலையில் வெளிப்படுத்தியுள்ளார்.

தீர்வு காணாத இனப்பிரச்சினை: ரணில் மீது குற்றச்சாட்டு! | Saba Kugathas Complaint Against Ranil

கடந்த 2000 ஆண்டு இனப்பிரச்சினைக்கான புதிய அரசியலமைப்புக்கான உத்தேச வரைபு நாடாளுமன்றத்தில் சந்திரிக்கா ஆட்சியில் சமர்ப்பித்த போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் உத்தேச வரைபின் பிரதிகளை நாடாளுமன்றத்தில் தீயிட்டு கொழுத்தினார்.

2002 ஆண்டு சமாதான உடன்படிக்கையில் விடுதலைப்புலிகளுடன் சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் கையொப்பம் இட்ட ரணில் விக்ரமசிங்க எதிர்த் தரப்பை உடைத்து பலவீனப்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒன்றை அரங்கேற்றுவதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்து பூரண ஆதரவு வழங்கினார்.

ட்ரம்புடன் வலுக்கும் முறுகல் : கனடா பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு

ட்ரம்புடன் வலுக்கும் முறுகல் : கனடா பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு

தேர்தல் நாடகம்

நல்லாட்சி அரசில் மைத்திரிபால சிறிசேனவை பலவீனப்படுத்தி புதிய அரசிலமைப்பு விடயம் பலவீனப்படவும் கலப்புப் பொறிமுறையில் போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்வதாக கால நீடிப்பை பெற்று ஏமாற்றியதையும் மாகாணசபை தேர்தலை நடத்த விடாது தடுப்பதற்கு தேர்தல் முறையில் திருத்தம் என்ற நாடகத்தில் எல்லை நிர்ணய விடயத்தை வைத்து தேர்தலை தடுத்தமையும் வரலாறு.

தீர்வு காணாத இனப்பிரச்சினை: ரணில் மீது குற்றச்சாட்டு! | Saba Kugathas Complaint Against Ranil

ரணில் விக்ரமசிங்க தனக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை திட்டமிட்டு சீரழித்து விட்டு கிடைத்த காலத்தில் நிறைவேற்றக் கூடிய நல்ல விடயங்களை அரசியலாக மாற்றி விட்டுள்ளார்.

இப்போது அதிகாரங்கள் இழந்த நிலையில் பித்தலாட்டம் போடுவதில் அர்த்தமில்லை. அதே நேரம் வரலாறு மன்னிக்கப் போவதில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

ஆயிரக்கணக்கில் அதிகரிக்கப்படும் அரச ஊழியரின் கொடுப்பனவு : வெளியான மகிழ்ச்சி தகவல்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019