மின்கட்டண அதிகரிப்பு - தேரர்களுக்கு சாகர காரியவசம் கூறும் ஆலோசனை
மின்சாரக் கட்டண அதிகரிப்பு
மின்சாரக் கட்டண அதிகரிப்புக்கு பௌத்த விகாரைகளில் சில எதிர்ப்புகள் எழுந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இந்த இக்கட்டான நேரத்தில் நாட்டின் நலனுக்காக கொஞ்சம் பொறுமையாக இருக்குமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிய அவர், அதுவரை போதியைச் சுற்றி சில விளக்குகளை ஏற்றி வைத்து போதி பூஜை போன்றவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
விளக்குகளை ஏற்றி, போதி பூஜை
“சமீபகாலமாக மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு பற்றி நிறைய எதிர்ப்புகளை கண்டேன். கோவில்களின் மின்கட்டணம் அதிகரித்துவிட்டதாக நம் சுவாமிகளுக்கும் பெரிய ஆட்சேபனை உண்டு. இது அரசாங்கம் விரும்பி செய்யும் காரியம் அல்ல என்று மதிப்பிற்குரிய எங்களின் பெருமக்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே போதி பூஜை செய்யும் போது, கோவிலில் உள்ள போதியைச் சுற்றி சில விளக்குகளை ஏற்றி, முன்பு போல் போதி பூஜை செய்வோம். மீண்டும் எதிர்காலத்தில் அழகிய மின் விளக்கு மூலம் அதைச் செய்ய முடியும்.
அதுவரை நாட்டின் நலன் கருதி பொறுமை காக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.
