உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

Parliament of Sri Lanka Sajith Premadasa Sri Lanka Election Local government Election
By Sathangani Dec 01, 2023 09:30 AM GMT
Report

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அரசாங்கம் பிற்போட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுவரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக அதிபர் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்: இன்றைய நாணயமாற்று வீதம்


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்

அரசியலமைப்புக்கு இணங்க, அதிபர் தேர்தல் ஒன்றை பிற்போடும் அதிகாரம் இல்லை. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது? இதற்கிணங்க, எப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்? எந்தக் காரணத்தினால் இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச | Sajith Raised Questions Local Council Elections

2025 வரை இந்தத் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாக எதனை அடிப்படையாகக் கொண்டு அதிபர் அறிவித்தார்? எல்லை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், நிதியில்லை என்றும் பல காரணங்கள் கூறப்பட்டன. தேர்தலை நடத்தினால், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் அரசாங்கம் அழுத்தம் பிரயோகித்தது.

இந்தத் தேர்தலுக்காக எப்போது வேட்புமனுக்கள் கோரப்பட்டன? வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய எத்தனை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? வேட்புமனு தாக்கல் செய்த அரச அதிகாரிகள், இன்று பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இவர்களின் தொழில் இல்லாது போயுள்ளது. எத்தனை பேருக்கு அரச இவ்வாறு தொழில் இல்லாது போயுள்ளது?

இவர்களின் உரிமை மீறப்பட்டமைக்கான பொறுப்பை யார் ஏற்றுக் கொள்ள வேண்டும்? மீண்டும் இவர்களை எப்போது சேவையில் இணைத்துக் கொள்வீர்கள்? உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது? தேர்தலை பிற்போட்டமையால் ஏற்பட்ட நட்டத்திற்கு யார் காரணம்?” என கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்