இங்கிலாந்தில் பயன்பெறும் 1 இலட்சத்து 50 ஆயிரம் மருத்துவர்கள்
இங்கிலாந்தில் தற்போது முதலாம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களுக்கு 10.3 சதவீதமும், இளநிலை மருத்துவர்களுக்கு 8.8 சதவீதமும், மருத்துவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமும் சம்பள உயர்வு வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள இளநிலை மருத்துவர்கள் தங்களுக்கு 35 சதவீதம் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு எட்டப்படாததால் அவர்கள் கடந்த பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி புகையிரத, விமான போக்குவரத்து உட்பட பல்வேறு துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபடும்போது பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கையில் அரசாங்கம் உறுதியாக இருந்தது.
பொருளாதார நெருக்கடி
கொரோனா தொற்று, உக்ரைன் போர், பிரெக்சிட் அமைப்பில் இருந்து வெளியேற்றம் போன்றவற்றால் இங்கிலாந்தின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியில் உள்ளது.

இந்தநிலையில் 35 சதவீத சம்பள உயர்வு வழங்கினால் அது பணவீக்கத்தை இன்னும் அதிகரித்து விடும்.
இதனால் ஏழைகள் பெரும் இன்னலுக்குள்ளாக நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதன்மூலம் அவர்களுக்கு கணிசமாக சம்பளம் உயர்வதோடு பணவீக்கமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்கும் என கருதப்படுகிறது.
அரசின் இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள சுமார் 1 இலட்சத்து 50 ஆயிரம் இளநிலை மருத்துவர்கள் பயன்பெறுவார்கள் என இங்கிலாந்தின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.