அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான அதிகாரி சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம்..!
ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமையன்று அவர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பவார் இலங்கை வருகை தருவார் என அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
ரணிலுடன் பேச்சுவார்த்தை
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சமந்தா பவர், குறித்த விஜயத்தின் போது பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடாத்த உள்ளார்.
இதேவேளை,
இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு அமெரிக்கா உதவும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் சமந்தா பவார் இலங்கை விஜயம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
