ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் அபாய எச்சரிக்கை!
sampanthan
tna
un parliament
By Vanan
இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியது போல சர்வதேசத்தை ஏமாற்றலாம் என்று ராஜபக்ச அரசு நினைத்தால் அது மிகப்பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியதா இக்கட்டான நிலையிலேயே அரசாங்கம் உள்ளது.
எனவே, இந்த அரசு தனது தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து மாற வேண்டியது மிகவும் அவசியம் - மாறாவிட்டால் அரசின் எதிர்காலம் சாத்திமானதாக அமையாது.
இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன்.
ஐரோப்பிய நாடாளுமன்றத் தீ்மானம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச்செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஐரோப்பிய நாடாளுமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்பதாக அவர் கூறினார்.
you may like this videos?
1ம் ஆண்டு நினைவஞ்சலி