கோட்டாபயவாக மாறிய சரத் பொன்சேகா! நாடாளுமன்றத்தில் நடந்த சம்பவம்
நாடாளுமன்றத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, கோட்டாபய ராஜபக்சவான விடயம் நேற்று பதிவாகியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று அரச தலைவரின் மீது அதிருப்தியைத் தெரிவிக்கும் பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பதற்கு நிலையியற் கட்டளையை இடைநிறுத்தி வைப்பது தொடர்பாக இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது சரத் பொன்சேகா உள்ளிட்ட சிலர் தம்மால் வாக்களிக்க முடியவில்லை என கூறினார்.
இதனையடுத்து அவர்களை ஒவ்வொருவராக பெயர் குறிப்பிட்டு அழைத்து ஆதரவா இல்லையா என சபாநாயகர் கேட்டார்.
இந்த நிலையிலேயே சரத் பொன்சேகா பார்த்து சபாநாயகர் “கோட்டாபய ராஜபக்ச” எனக்கூறிவிட்டு உடனடியாக சிரித்து சமாளித்து சரத் பொன்சேகா என அழைத்தார் என்று நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்