18 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ள சவூதி : பாதுகாப்பு அமைச்சு தகவல்
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் சவூதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் 18 ஆளில்லா வானூர்திகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவின் செய்தி நிறுவனத்தை மேற்கோள்காட்டி பிபிசி விடுத்துள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த சில நாட்களாக இவ்வாறான பல ஆளில்லா வானூர்திகள் முறியடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எண்ணெய் வலயத்தை இலக்கு வைத்து
எனினும், இந்த ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள் எந்த இடத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்த தகவல்களை சவூதி அரேபியா இதுவரை வெளியிடவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, 'ஷைபா' (Shaybah) எண்ணெய் வலயத்தை இலக்கு வைத்து பயணித்த மற்றுமொரு ஆளில்லா வானூர்தி, எம்டி குவார்ட்டர் (Empty Quarter) பாலைவனத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் வைத்து இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |