20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தூங்கும் இளவரசர் காலமானார்
சவூதி அரேபியாவின் (Saudi Arabia) 'தூங்கும் இளவரசர்' என அழைக்கப்படும் அல்-வலீத் பின் காலித் பின் தலால் காலமானார்.
20 ஆண்டுகள் கோமாவில் இருந்த இவர் தனது 36 வயதில் காலமானார்.
அவரது தந்தை இளவரசர் காலித் பின் தலால் பின் அப்துல் அஜிஸ் (Prince Khaled bin Talal bin Abdulaziz) தனது மகனின் மறைவுச் செய்தியை உறுதிப்படுத்தினார்.
மூளையில் கடும் பாதிப்பு
அல்லாஹ்வின் ஆணை மற்றும் விதியின் மீது முழு நம்பிக்கையுடனும் ஆழ்ந்த சோகத்துடனும் துக்கத்துடனும் எங்கள் அன்பு மகன் இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்இ அல்லாஹ்வின் கருணையால் இன்று காலமான அவருக்கு அல்லாஹ் கருணை காட்டட்டும் என அவரது தந்தை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
இளவரசர் அல்-வலீத் பின் காலித் பின் தலால் 2005 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் படித்து வந்த போது ஏற்பட்ட கார் விபத்தில், மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டது
சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் அப்துல் அஜிஸ் மருத்துவ நகரில், வெண்டிலேட்டர் உதவியுடன் 20 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
