புலமைப்பரிசில் பரீட்சை வினாக்களை கசியவிட்ட இருவருக்கும் தொடர் விளக்கமறில்

Sri Lanka Grade 05 Scholarship examination Education
By Shalini Balachandran Oct 07, 2024 10:06 AM GMT
Report

இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகளை கசியவிட்டதாக கூறப்படும் மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் மற்றும் பாடசாலை ஆசிரியரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவானது இன்று (07) கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் வட்ஸ்அப் ஊடாக பரிமாறப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

மதுபானசாலை விவகாரம் :அநுர அரசிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி..!

மதுபானசாலை விவகாரம் :அநுர அரசிடம் மனோ கணேசன் எழுப்பிய கேள்வி..!

பரீட்சைகள் திணைக்களம்

இந்தநிலையில், வினாத்தாள் கசிந்ததுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பரீட்சைகள் திணைக்களம் கடந்த 17 ஆம் திகதி விசாரணைகளை நடத்தியது.

புலமைப்பரிசில் பரீட்சை வினாக்களை கசியவிட்ட இருவருக்கும் தொடர் விளக்கமறில் | Scholarship Exam Paper Issue

இதையடுத்து, புலமைப்பரிசில் வினாத்தாளில் இருந்து மூன்று வினாக்களை நீக்கி அனைத்து மாணவர்களுக்கும் அந்த மூன்று வினாக்களின் மதிப்பெண்களை சமமாக வழங்க தீர்மானிக்கப்பட்டது.

அத்தோடு, பரீட்சையின் வினாத்தாளைப் புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்த பாடசாலை அதிபரும் ஆறு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்திருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்

இருவருக்கும் விளக்கமறியல்

இதனை தொடர்ந்து மஹரகம, தேசிய கல்வி நிறுவகத்தில் திட்டமிடல் பிரிவின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டார்.

குறித்த நபரை சந்தேகநபர் கடந்த (23) கடுவெல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இன்று ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை வினாக்களை கசியவிட்ட இருவருக்கும் தொடர் விளக்கமறில் | Scholarship Exam Paper Issue

இவரை தொடர்ந்து புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள் பகுதி ஒன்றின் மூன்று வினாக்களை வட்ஸ்அப் ஊடாக பகிர்ந்ததாக கூறப்படும் புலமைப்பரிசில் ஆசிரியர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில், இவர்கள் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்