அத்தையிடம் தங்க நகை திருட்டு! பாடசாலை மாணவி, காதலன் உட்பட மூவர் கைது
ஒரு பெண்ணிடமிருந்து 2 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் 16 வயது பாடசாலை மாணவி மற்றும் அவரது காதலன் மற்றும் மற்றொரு இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதன்போது கலேட்டுவமுல்ல, கணேமுல்லவைச் சேர்ந்த பாடசாலை மாணவி, அன்னாசிவத்த ராகமையைச் சேர்ந்த அவரது காதலன் மற்றும் மினுவங்கொட,நீல்பனகொடவைச் சேர்ந்த இளம் பெண் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவி தனது அத்தையின் தங்க நகைகளைத் திருடி, அதை தனது 17 வயது காதலனிடம் கொடுத்து, அதை விற்று அவளுக்கு ஒரு தொலைபேசி வாங்கித் தருமாறு கோரியுள்ளார்.
அடகு வைக்கப்பட்ட தங்க நகைகள்
இந்த நிலையில், 17 வயதுடைய காதலன் வயது குறைந்தவர் என்பதால், 21 வயது உறவினரான பெண்ணை பயன்படுத்தி தங்க நகைகளை அடகு வைத்துள்ளார்.

அவர் மூலம் 1.9 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை அடகு வைத்து, அதில் ஒரு சிறிய தொகையை செலவழித்து, தனது காதலிக்கு ஒரு தொலைப்பேசியை வாங்கி கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக வைத்திருந்ததாக காதலன் காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.
விசாரணை
இந்த நிலையில், தங்க நகைகளை விட்டுச் சென்ற இடத்தில் இல்லை என்பதை அறிந்ததும், சிறுமியின் அத்தை காவல்துறையினர் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தி, பாடசாலை மாணவி, அவரது காதலன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 3 நாட்கள் முன்