தரம் மூன்று மாணவி மீதான அத்துமீறல்: ஆசிரியர் தலைமறைவு
தரம் மூன்று மாணவியை பாலியல் அத்துமீறல்செய்ததாக தெரிவிக்கப்படும் ஆசிரியரை கைது செய்ய பல சிறப்பு காவல்துறை குழுக்கள் தேடுதலை ஆரம்பித்துள்ளதாகதம்புள்ளை காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
கலேவெல கல்வி வலயத்திற்குட்பட்ட தம்புள்ளை பிரிவில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை விடுமுறை நாட்களில் இலவச வகுப்பு
தற்போது பாடசாலை விடுமுறை என்பதால் ஆசிரியர் பாடசாலையில் இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார்.
குழந்தைகளுக்கு கற்பிக்கும் போது ஆசிரியர் சிறுமிகளில் ஒருவரை அத்துமீறல் செய்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இத தொடர்பாக குழந்தையின் பெற்றோர் தம்புள்ளை காவல்துறை குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்தில் திங்கட்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆசிரியரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சி
முறைப்பாட்டின் அடிப்படையில் ஆசிரியரை கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்துள்ளனர், ஆனால் சந்தேகநபரான ஆசிரியர் அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தலைமையக காவல்துறை பொறுப்பதிகாரி சுகத் விஜேசுந்தர தெரிவித்தார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |