டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பங்களாதேஷ் வெளியேற்றம்
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்களுக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பங்களாதேஷ் அணி உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச கிரிக்கட் சபை (ICC) அறிவித்துள்ளது
இந்தநிலையில் பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணி இத்தொடரில் பங்கேற்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வமாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்கப் பாதுகாப்பு காரணங்களைக் கூறி பங்களாதேஷ் மறுப்புத் தெரிவித்திருந்தது.
பங்களாதேஷ் கிரிக்கெட் சபை
போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை 2026 ஜனவரி ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஐசிசி நிராகரித்த நிலையில், இந்த இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில், தகுதி பெறாத அணிகளில் முன்னிலையில் இருந்த ஸ்கொட்லாந்து அணிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து அணி
ஸ்கொட்லாந்து அணி இப்போது குழு 'C' இல் இடம்பெறும். இதன்படி, அந்த அணி இத்தாலி, நேபாளம், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.

ஸ்கொட்லாந்து அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொள்ளவுள்ளது.
2026 டி20 உலகக்கிண்ணத் தொடர் திட்டமிட்டபடி பெப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |