சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜயசுந்தரவுக்கு திடீர் இடமாற்றம்!
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் (SDIG) வருண ஜயசுந்தர, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவர் காவல்துறை தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வருண ஜயசுந்தர, காவல்துறை தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபராகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்து, தன்னைக் கைது செய்வதை தடுக்கக் கோரி அண்மையில் வருண ஜயசுந்தர ரிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்தநிலையில் வருண ஜயசுந்தரவைக் தற்போதைய கட்டத்தில் கைது செய்வதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்ததை அடுத்து குறித்த மனு மீதான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |