மாவீரர் நினைவேந்தலுக்குச் செல்லும் மக்கள் மீது கெடுபிடி
மாவீரர் வாரத்தின் இரண்டாவது நாள் இன்று கடக்கும் நிலையில் தமிழர் தாயகத்தில் இன்றும் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மாவீரர்கள் நினைவுக்கூரப்பட்டனர்.
நல்லூரில் தியாகி திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள மாவீரர்களின் கல்வெட்டுக்களை இன்றும் மக்கள் பார்வையிட்டு தீபமேற்றி அஞசலி செலுத்தியிருந்தனர்.
மக்கள் மீது கெடுபிடி
எனினும் நல்லூர் பகுதிக்குச் செல்லும் வீதிகளில் புதிதாக சிறிலங்கா காவல்துறையினர் தடைகளை ஏற்படுத்தியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
திலீபனின் நினைவாலய பகுதியால் இரவுவேளையில் செல்லும் மக்களை நேற்று முதல் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர்.
தடைகளைத் தாண்டி நினைவுக்கூரல்
எனினும் தடைகளைத் தாண்டி மக்கள் நினைவுக்கூரல்களை நடத்தி வருகின்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் இன்றும் மாணவர்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.