மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபசார விடுதி : 10 பெண்கள் அதிரடியாக கைது
வாதுவ நகர மையத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபசார விடுதிகளை சோதனை செய்து பத்து பெண்களையும் ஒரு ஆண் முகாமையாளரையும் கைது செய்ததாக வாதுவ காவல்துறை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ, எம்பிலிப்பிட்டி, இரத்தினபுரி, காலி, பதுளை, வெல்லவாய மற்றும் பாணந்துறை ஆகிய இடங்களைச் சேர்ந்த 20 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது
காவல்துறையினர் சோதனை
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட தேடுதல் பிடியாணையின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது, மேலும் அப்பகுதியில் மறைந்திருந்த OIC தலைமை ஆய்வாளர் ஜனக விதானகே உள்ளிட்ட காவல்துறை குழு இந்த சோதனையை நடத்தியது.
பல்வேறு தரப்பினரும் பெற்றுவந்த சேவை
சோதனையில் பங்கேற்ற ஒரு அதிகாரி கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் உள்ள தொழிலதிபர்கள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் சிறிது காலமாக அங்கு சேவைகளைப் பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
