இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்புங்கள் - மகிந்தவின் நெருங்கிய நண்பர் அவசர கோரிக்கை
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Sri Lanka
Ma. Subramanian
Sri Lanka Anti-Govt Protest
By Sumithiran
இலங்கையில் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவாக இந்திய இராணுவத்தை அனுப்புமாறு இந்தியாவின் மூத்த பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கோட்டாபாய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகிய இருவரும் சுதந்திரமான தேர்தலில் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சட்டபூர்வமான தேர்தலை ஒரு கும்பல் சிதைக்க இந்தியா எப்படி அனுமதிக்கும்? என்றுஅந்த பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியாவின் இராணுவ ஆதரவை ராஜபக்சக்கள் பெற விரும்பினால், நாங்கள் அதனை வழங்க தயாராக வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமி முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி