நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் : இந்திய விஞ்ஞானி வெளியிட்ட தகவல்
India
Chandrayaan-3
By Sumithiran
இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான் 3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தில் நிலை நிறுத்தி சாதனை படைத்த அதேவேளை சூரியனை ஆராய்ச்சி செய்யும் வகையில் ஆதித்யா எல்1 விண்கலத்தை நேற்று (02) அனுப்பியுள்ளது.
இந்தநிலையில் நிலவிற்கு மனிதர்களை தற்போது அனுப்புவது சாத்தியமில்லை என இஸ்ரோ விஞ்ஞானி மோகனகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவித்த அவர், நிலவுக்கு மனிதர்களை அனுப்புவது உடனடி சாத்தியம் இல்லை.
தோல்வியில் இருந்து கற்ற பாடம்
எனினும் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது என் கூறினார்.

மேலும் தோல்வியில் இருந்து கற்ற பாடமே சந்திரயான் 3 வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.