திருகோணமலையில் சட்டவிரோத மணல் அகழ்வு: 7 பேர் கைது
திருகோணமலையில் (Trincomalee) சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (12) இடம்பெற்றுள்ளது.
இதன்போது திருகோணமலை -சேருநுவர காவல் பிரிவிலுள்ள தீத்தான்தட்டிப் பகுதியில் சட்ட விதிமுறைகளை மீறி மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த ஏழு பேரும் கைது செய்யப்பட்டு காவல்துறை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (14) மூதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக சேருநுவர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மணல் அகழ்வு
மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் அகழ்வு மேற்கொண்டமைக்காகவே இவ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சேருநுவர காவல்துறையினர், கந்தளாய் விசேட அதிரடிப்படையிர் இணைந்து இவ் சுற்றி வளைப்பை மேற்கொண்டு உழவு இயந்திரங்களையும் சந்தேக நபர்களையும் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

