கடும் வறட்சி : இராவணா அருவிக்கு ஏற்பட்ட நிலை
Badulla
Sri Lanka Tourism
By Jaso
பதுளை(badulla) மாவட்டத்தில் தற்போது நிலவும் கடுமையான வறட்சியான காலநிலை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை(tourist) ஈர்க்கும் சுற்றுலாத் தலமான இராவணன் அருவிக்கு முக்கிய இடம் உண்டு.
அழகாக காட்சியளிக்கும்
பண்டாரவளை, பூனாகலை மலைத்தொடரில் தொடங்கி, இராவணா நீர்வீழ்ச்சி மிகவும் அழகாக காட்சியாகும்.

வெறிச்சோடிய அருவி
ஆனால் தற்போது நிலவும் வறண்ட வானிலையால் அருவியில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இராவணன் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் உணவளித்து வந்த வன விலங்குகளும் அவதிப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்