ஷானி அபேசேகரவின் சிறப்பு அறிக்கை! பாதுகாப்பு அச்சத்தில் சிறையை சுற்றி கூச்சலிடும் உறவினர்கள்!
CID - Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Dharu
நீர்க்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக இன்று (07) காலை, நீர்க்கொழும்பு நீதிவான் ஷிலனி பெரேராவிடம் சம்பவம் குறித்த சிறப்பு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் ஷானி அபேசேகர, நீதிவானின் அலுவலகத்தில் முன்னிலையாகி சம்பவம் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்திற்கு வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே, இன்று (07) அதிகாலை 2.00 மணியளவில் நீதிவான் ஷிலனி பெரேரா சிறைச்சாலைக்கு சென்று சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் காரணமாக சிறைச்சாலை வட்டாரத்தை சுற்றி பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் சிறைச்சாலையை சுற்றி கலகத்தடுப்பு பிரிவு குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |