ஏழரை மணிநேர வாக்குமூலம்: சற்றுமுன்னர் வெளியேறிய சஷீந்திர ராஜபக்ச
CID - Sri Lanka Police
Shasheendra Rajapaksa
Sri Lankan Peoples
Bribery Commission Sri Lanka
By Thulsi
புதிய இணைப்பு
இன்று (05) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளித்த முன்னிலையான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, சஷீந்திர ராஜபக்சவிடம் சுமார் 7 1/2 மணி நேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீன நிறுவனமொன்றிடமிருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலாம் இணைப்பு
முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி