பிரித்தானியாவில் அதிரடியாக சுற்றி வளைக்கப்பட்ட தமிழர்களின் வணிக நிறுவனங்கள்.!
பிரித்தானிய நகரங்களில் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் முகமாக தமிழர்களின் வணிக நிறுவனங்கள் மற்றும் இந்திய பாகிஸ்தானிய உணவகங்கள் சிலவற்றில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
சட்டவிரோத குடியேறிகளை தடுக்க முடியாத நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்ராமரின் அரசாங்கம் இருப்பதால் பிரித்தானிய அரசியலில் நைஜல் ஃபராஜின் அதிதீவிர வலதுசாரிக் கட்சிக்கு வாக்காளர்களிடம் அதிக செல்வாக்கு வளர்ந்து வருவது அவதானிக்கப்பட்டுள்ளது.
மஞ்செஸ்டர், நொட்டிங்ஹாம், ஷெஃபீல்ட் உட்பட்ட நகரங்களில் ஆகிய இடங்களில் இந்தவாரம் அதிகாலை வேளையில் நடத்தப்பட்ட சோதனைகளில் ஆபிரிக்க நாடுகளில் இருந்து பராமரிப்புத்துறை பணியாளர்கள் என்ற பொர்வையில் சட்டவிரோதமாக 200 க்கும் மேற்ப்பட்ட குடியேறிகளை பிரித்தானியாவுக்குள் கொண்டுவர உதவிய சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சின் அறிவிப்பு
இதேவேளை, ஆங்கிலக்கால்வாயில் குடியேறிகள் சட்டவிரோதமாக பயணிக்கும் படகுகளை இடைமறித்து தடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என பிரான்ஸ் அறிவித்துள்ளது.
எதிர்வரும் கோடைகாலத்தில் ஆங்கில கால்வாயை சட்டவிரோதமாக கடக்கும் குடியேறிகளின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்டும் நிலையில் இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் 19 சிறிய படகுகளில் ஆங்கிலக்கால்வாயை கடந்து 1,195 குடியேறிகள் பிரித்தானியாவுக்குள் நுழைந்தமை பிரித்தானியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
புதிய நடவடிக்கை
இதனையடுத்து பிரான்சிடம் பிரித்தானிய அரசாங்கம் விடுத்த விடுத்த அழுத்தமான கோரிக்கைகளால் சட்டவிரோதமாக பயணிக்கும் படகுகளை கடலில் இடைமறித்து தடுக்கும் நடவடிக்கைகளை பிரெஞ்சு கடலோர காவற்படை எடுக்கவுள்ளது.
ஆனால் கடலில் குடியேறிகளின் படகுகளை இடைமறித்தால் அவற்றில் பயணிப்போரின் உயிர்களை அது ஆபத்தில் ஆழ்த்தும் அபாயத்தை ஏற்படுத்தும் என அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் எச்சரித்ததுள்ளன.
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோத குடியேறிகளை கொண்டுசெல்லும் வகையில் பிரான்சின் கடற்கரைகளில் வோட்டர் ரக்ஸி சேவைபோல அதிகளவு டிங்கி படகுகளின் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
You may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
