ஆளுநர்களின் ஆளுகை சட்டவிரோதமானது! மாகாண சபை தேர்தலில் உருவாகியுள்ள பாரிய சிக்கல்
மாகாண சபைகளை ஆளுநர்களில் ஆளுகையின் கீழ் கொண்டு செல்வது சட்டவிரோதமானது என முன்னாள் தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் வருடாந்த ஆராச்சி மாநாடு மற்றும் ஐந்தாண்டு திட்டம் நேற்று (05.11) வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் தலைவரிடம் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு விரோதம்
அதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர்,
“மக்கள் பிரதிநிதித்துவ நிறுவனம் ஒன்றை நடத்தி செல்வதற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என மாகாண சபை தேர்தல் தொடர்பான வழக்குத் தீர்ப்பின் போது உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் முறைமை தேவையில்லை என்றால் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்து 13 ஆம் திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
எந்த அரசாங்கம் என்றாலும் தேர்தலை தள்ளிப் போடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானதாகும்.
தேர்தல் செலவுக்கான பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது.மாகாண சபைத் தேர்தல் நூட்லிஸ் சிக்கலாக்கியுள்ளது.
பழைய விகிதாசார முறை
நாடாளுமன்றத்தில் மாத்திரமே இந்த சிக்கலை நிவர்த்திக்க முடியும். பழைய விகிதாசார முறையில் அல்லது இரண்டும் கலந்த முறையில் நடத்த வேண்டும்.

பழை முறையில் தேர்தலை நடத்துவதென்றால் அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடத்தலாம்.இரண்டும் கலந்த முறைமை என்றால் காலமெடுக்கும்.
எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஆட்சி அதிகாரம் உள்ள உள்ளுராட்சி சபையில் கூட மாகாண சபை தேர்தலை நடத்துமாறு பிரேரணை ஒன்றையாவது கொண்டுவருவதில்லை.
அரசாங்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட உடன் பழைய முறைமையில் தேர்தலை நடத்தியிருந்தால், வெற்றி பெற்றிருக்கலாம்.ஆனால் தற்போதைய நிலைமை பெரும் சிக்கல்களை தோற்றுவித்துள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |