புடினுக்கு பேரிடி! மிகவும் நெருக்கமானவர் மீது துப்பாக்கிச் சூடு
மொஸ்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ரஷ்யாவின் முக்கிய இராணுவ உளவுத்துறை அதிகாரியும் ஜனாதிபதி புடினுக்கு நெருக்கமானவருமான லெப்டினன்ட் ஜெனரல் விளாடிமிர் அலெக்ஸீவ் படுகாயமடைந்துள்ளார்.
அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது.
முக்கிய பங்கு
முதுகில் பலமுறை சுடப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த அலெக்ஸீவுக்கு சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டு அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரியவருகிறது.

Image Credit: Kyiv Post
அலெக்ஸீவ், ரஷ்யாவின் GRU இராணுவ உளவுத்துறையின் துணைத் தலைவராக செயல்பட்டு வந்ததுடன், உக்ரைன் போருடன் தொடர்புடைய பல ரகசிய நடவடிக்கைகளிலும் முக்கிய பங்கு வகித்தவர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பின்னணி காரணம்
அத்தோடு, அவர் புடினின் மிக நம்பிக்கைக்குரிய இராணுவ அதிகாரிகளில் ஒருவராகவும் கருதப்படுகிறார்.

Image Credit: The New York Times
இந்த தாக்குதலின் பின்னணியில் உக்ரைனிய உளவுத்துறைகள் அல்லது ரஷ்யாவின் உள் அதிகாரப் போட்டிகள் காரணமாக இருக்கலாம் என பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த சம்பவம், ரஷ்ய அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |