வவுனியா நெடுங்கேணியில் இன்றிரவு துப்பாக்கி சூடு - யுவதி பலி
Sri Lanka Police
Vavuniya
Shooting
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
இன்றிரவு துப்பாக்கிசூடு
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இன்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார்.
சிவா நகர் பகுதியில வசிக்கும துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதி தனது வீட்டிற்கு வெளியில் வரும்போது அவர் மீதே இத்துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
