கிளிநொச்சியில் நிறுத்தாமல் சென்ற வாகனம் மீது துப்பாக்கிசூடு
Kilinochchi
Sri Lanka Police Investigation
Gun Shooting
Arrest
By Erimalai
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியிலிருந்து சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மணலுடன் பயணித்த டிப்பர் வாகனம், காவல்துறையின் சமிக்ஞையை மிறிச்சென்றதால் காவல்துறையினரால் துப்பாக்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்தாமல் உள் வீதியூடாக தப்பிச்செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.
வாகனம் குடை சாய்ந்துள்ளது
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டிப்பர் வாகனம் குடை சாய்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக தர்மபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்
மாகாண சபையை அரசியல் தீர்வாக திணிக்கப்படுவது தவறு...
6 நாட்கள் முன்
9ம் ஆண்டு நினைவஞ்சலி