கொல்கத்தா டெஸ்டிலிருந்து விலகிய சுப்மன் கில்: தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் சுப்மன் கில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் கொல்கத்தாவில் உள்ள வுட்லண்ட்ஸ் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்டின் எஞ்சிய போட்டியில் அவர் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நிலை
நிபுணர்கள் உட்பட வைத்தியக் குழு தற்போது சுப்மன் கில்லின் உடல்நிலையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (15.11.2025) அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்பது நிச்சயமற்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |