கிளிநொச்சியில் ஆரம்பமானது கையெழுத்து வேட்டை! (காணொளி)
People
Kilinochchi
SriLanka
Signature
Anti Terrorism
By Chanakyan
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்து இடும் மக்கள் போராட்டம் இன்று கிளிநொச்சி பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகியது.
இக்கையெழுத்து போராட்டத்தில் மக்கள் ஆர்வத்துடன் வருகை தந்து கையொப்பம் இட்டுச்செல்வதை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இப்போராட்டத்துக்கு கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர்கள் வேழமாலிகிதன், சுரேன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்