இஸ்லாமியர்கள் காணியில் புத்தர் சிலை - நடந்தது என்ன..! நேரடி ரிப்போர்ட் (காணொளி)
திருகோணமலை - குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மத குருவால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளிதுமளி நிலவியது.
குறித்த சம்பவம் ஏப்ரல் 1 ஆம் திகதி இடம் பெற்றுள்ளதுடன், ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம்பெற்று வந்ததாக கூறப்பட்டது.
குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாதுகாவலருடன் சென்றிருந்த வேளையில், பொது மக்களை மெய்ப்பாதுகாவலர் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சுமத்தியிருந்தனர்.
இந்த நிலையில், சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி நுழைந்து புத்தர் சிலை வைக்க முற்பட்ட பனாமுரே திலகவங்ச நாயக்க தேரர் , பாதிக்கப்பட்ட மக்கள் , அந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அதே பகுதியில் உள்ள ஏனைய தேரர்கள் ஆகியோரிடம் நாம் பேசி அவர்களின் கருத்துக்களை பதிவு செய்துகொண்டோம்.
இப்பிரச்சினை தொடர்பான முழுமையான விபரங்களை காணொளியில் பாருங்கள்,
துப்பாக்கி முனையில் புத்தர் சிலை வைக்க முயற்சி - தமிழர் பகுதியில் அடாவடி
