யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய காற்பந்து கழகங்களுக்கு தடை!
இலங்கை காற்பந்து சம்மேளனம் (FFSL) இலங்கையில் உள்ள ஆறு முக்கிய காற்பந்து கழகங்களின் நிர்வாகங்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்துள்ளது.
சம்மேளனம் அரசியலமைப்பிற்கு முரணான பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் பல நீதிமன்ற தீர்ப்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை விசாரித்த பிறகு, தடையைத் தொடரலாமா வேண்டாமா என்பது தொடர்பில் எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும் என்று FFSL தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.
தடை தொடர்பான முடிவு
அதன்படி, எம்பிலிப்பிட்டிய, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கல்குடா, மாந்தை மேற்கு மற்றும் பருத்தித்துறை ஆகிய ஆறு கால்பந்தாட்ட கழகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற FFSL ஆண்டு மாநாட்டில் மற்ற காற்பந்து கழகங்களின் பிரதிநிதிகளின் வாக்கெடுப்பால் தடை குறித்த முடிவு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதிய நிர்வாகம்
இந்த நிலையில், FFSL இன் கீழ் இயங்கி வந்த 67 காற்பந்து கழகங்களில் தொடர்புடைய ஆறு கழகங்களும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறானதொரு பின்னணியில், இடைநிறுத்தப்பட்ட குறித்த கழகங்களின் குறைபாடுகளை மீட்டெடுக்கவும் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கவும் FFSL ஆல் ஒரு இயல்பாக்கக் குழு நிறுவப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
