கெஹலியவுக்கு எதிரான நம்பிக்கைல்லா பிரேரணையில் கையெழுத்திட்டது எதிரணி
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கைல்லா பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று கையெழுத்திட்டுள்ளது.
இந்த நிகழ்வு இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
வைத்தியாசாலைகளில் மரணங்கள்

சுகாதாரத்துறையில் தரமற்ற மருந்துகள் பயன்படுத்தப்பட்டமையால் அண்மை நாட்களில் வைத்தியாசாலைகளில் சில மரணங்கள் இடம்பெற்றிருந்தன.
இந்த பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றில் உத்தியோகப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், குறித்த பிரேரணையில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினர் கைச்சாத்திட்டுள்ளதுடன் மக்கள் வாக்குகளால் தெரிவான ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கையெழுத்திட வேண்டுமென கட்சித் தலைவர் கோரியுள்ளார்.
இதேவேளை, எதிர்கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதன் போது பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.